முன்னர் பிக்குகள் பாஸ்டரர்கள் தான் சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்ற செய்தி அதிகமாக வெளிவந்திருந்தன. தற்போது சைவ கோவில்களின் பூசாரிகளும் காமவெறி கொண்டு அலைகிறார்கள் என்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
இதற்கு உதாரணமாக இங்கே இரு செய்திகளை தருகிறோம்.
யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய பூசாரி ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய பூசாரி ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் தொடர்பில் தினமும் ஏராளமான முறைப்பாடகள் கிடைக்கப்பெற்றுகின்றன என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.
எமது மதத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பல்வேறு தரப்பிலும் தமது ஒழுக்க நிலையை மாற்றியமையினால் இந்துக்களுக்கு மட்டுமல்ல எமது மதத்திற்கும் பெரியதொரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
எமது மதத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பல்வேறு தரப்பிலும் தமது ஒழுக்க நிலையை மாற்றியமையினால் இந்துக்களுக்கு மட்டுமல்ல எமது மதத்திற்கும் பெரியதொரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் ஆலய நிர்வாகத்தினர் மீதும் சிவாச்சாரியார்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளது. அவை சொல்லமுடியாத பிரச்சனைகளாக உள்ளன. குறிப்பாக கோவில்குளம் விஸ்ணு ஆலயத்தில் 18 வருடங்களாக கடமையாற்றிய பிரதம சிவாச்சாரியாih ஒழுக்க நிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாரும் அவர் சார்ந்த புத்திரர்களும் ஆலயத்தின் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
Read More »





