இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக, அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை 3.00  மணிக்கு வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து நகர்ப்பகுதி வரை இடம்பெற்றது. 

வவுனியா மாவட்ட செயலகம்,வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் மற்றும் வவனியா பிரதேச செயலாளர் அ. சிவபாலசுந்தரன் ஆகியோர் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில், அரச அதிகாரிகள் அரச திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள் பொது மக்கள் உட்பட அரச வாகனங்களும் கலந்துகொண்டிருந்தது.

இதன்போது 'அமெரிக்கா ஒழிக', ஜனாதிபதி வாழ்க, 'வெளிநாட்டு சதியை முறியடிப்போம்' போன்ற கோசங்கள. எழுப்பட்டதுடன் அரச உத்தியோகஸ்தர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு வருகை தந்த தமிழ் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், கிராம சேவையாளர்கள் மாவட்ட செயலகத்திலும் பிரதேச செயலகத்திலும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக மக்கள் பங்கேற்க வேண்டும் என கோரப்பட்டதாகவும் அதன் நிமிர்த்தம் தாம் கலந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அங்கு சென்றவேளை, பதாதைகளை கையில் தந்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் பணிக்கப்பட்டதாகவும்,   அவ்வார்ப்பாட்டத்தில் அரச அதிகாரிகளும் வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரும் காணப்பட்டனர்.

எனினும், தாம் அங்கிருந்து சென்றால் தமது கிராமங்களுக்கான உதவிகள் நிறுத்தப்படலாம் என்பதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்றைய தினமும்  மீள் எழுச்சி திட்டத்தினால் வவுனியா நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் பேரூந்துகளில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.