விடுவிக்கப்ட்ட முன்னாள் போராளிகள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை!-அமைச்சர் கஜதீர

வவுனியாவில் இன்று முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழாவினை கொண்டாடுவதற்கான விளையாட்டு விழாவை சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழவில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர, அரச தகவல் தினைக்கள இயக்குனர் மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை தலைவர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் 700 பேர் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வவுனியா நகரசபை மைதானத்தை சுற்றிலும் இருந்து கதைத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்

குறித்த 700 முன்னாள் போராளிகளும் நீதிமன்ற தண்டனையைப் பெற்று புனருத்தாரண நிலையங்களில் தடுத்து வைக்கப்ட்டுள்ளனர்.

இந்த 700 பேரும் அடுத்த ஆண்டு விடுதலைசெய்யப்படவிருக்கின்றார்கள். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்டவுள்ள திகதியையும் அவர்கள் அறிந்திருப்பதால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்

இந் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்ட்ட முன்னாள் போராளிகள் எவரும் சட்டவிரோத நடவடிக்கையிலோ குற்ற செய்யும் செயற்பாட்டையோ செய்யாது சமூகத்திலே நல்ல பிரஜைகளாக வாழ்வதாக பாராட்டு தெரிவித்த போது முன்னாள் போராளிகள் கை தட்டி மகிழ்ச்சி வெளியிட்டனர்

புலம்பெயர் தமிழர்களே இலங்கையில் நிலவும் நல்லிணக்கத்தை குழப்புவதாக குற்றம் சுமத்திய அமைச்சர் கஜதீர தமிழ் பேசத் தெரியாத புலம்பெயர் தமிழர்களும் இதில் அடங்குவதாக குற்றம் சுமத்தினார்.

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தொழில்வாய்ப்பிற்கும் 300 மில்லியன் நிதியும் ஒதுக்கப்ட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்நாள் போராளியொருவர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எனவே தாம் விடுதலையாகும் திகதியும் தமக்கு தெரியுமென குறிப்பிட்ட அவர் விடுதலையின் பின்னர் தமது தொழில் நடவடிக்கைக்கு அரசு நிதி உதவியினை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.