வவுனியாவில் ஒரே இரவில் இரு நகைக் கடைகளில் கொள்ளை
வவுனியாவில் மீண்டும் திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருகின்றது. நேற்று முன்தினம் இரவு வவுனியா திருநாவற்குளத்திலும் குருமண்காட்டிலும் உள்ள இரு நகைக் கடைகளில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு திருநாவற்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள நகைக்கடை ஒன்றினை உடைத்த திருடர்கள் அதனுள் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
அதேவேளை அன்றைய தினம் இரவே குருமண்காட்டில் உள்ள நகைக்கடை ஒன்றினையும் உடைத்த திருடர்கள் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. எனினும் திருநாவற்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு திருடர்கள் தமது கைவசையைக் காட்டியுள்ளமை தொடர்பாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
By:-yasikanth