Pages

Pages

2கிலோ கஞ்சாவுடன் தென்பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது

வவுனியா வைத்தியசாலையின் பின்புறமாக மேசன் தொழில் செய்பவரிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா செட்கள் செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012 மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த நபர் பயிரிட்ட கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தென் பகுதியை சேர்ந்த இவர் சூட்சுமமான முறையில் கட்டிட வேலைகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பையொன்றில் இரண்டு கிலோ நிறையுடைய இக்கஞ்சா செடிகளை வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
By:-yasikanth