வவுனியாவில் தனியார் காணியில் சிங்களவர்கள் அனுமதியின்றி அத்துமீறி மயானம் அமைப்பு
நகரசபையின் எல்லைக்குள் சுடுகாடு, இடுகாடு அமைப்பதாயின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நகரசபையின் அனுமதி பெறுதல் வேண்டும். ஆயினும் இதற்கு எவ்விதமான அனுமதி பெறாமல் இப்பகுதியைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர் அமைத்து வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக காணி உரிமையாளர் வவுனியா நகரசபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து இன்றைய தினம் அவ்விடத்திற்கு நேரடியாக சென்று உப-தலைவர் உட்பட நகரசபையின் குழுவினர் பார்வையிட்டனர்.
இதன் பிரகாரம் மேற்படி காணியில் கடந்த 22-04-2012 அன்று பௌத்த சமய முறைப்படி இறந்த ஒருவரின் கிரியைகள் இடம்பெற்று உடலும் அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
தச்சங்குளம் பிரதேச மக்கள் 1989ம் ஆண்டு பாதுகாப்பு காரணம் கருதி அவ்விடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். ஆயினும் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. நகரசபைக்கு வருடாவருடம் உரிய வரிகளை செலுத்தி வருவதோடு காணிக்குரிய உறுதிப்பத்திரங்களும் இம்மக்களிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்யவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
By:-yasikanth