'வவுனியா நகரசபை உபதலைவரின் அசமந்தப்போக்கே அங்காடி வியாபாரிகளின் சிரமத்திற்கு காரணம்'
வவுனியா அங்காடி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஓர் இடத்தை ஒதுக்கி வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் வவுனியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இவ்வேலைத்திட்டத்தை வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான நகரசபையின் உபதலைவரிடம் கையளித்த பின்னர் அதனை உடன் செயற்படுத்தாமல் பொறுப்பற்ற நிலையில் விட்டமையினால் இன்றும் அங்காடி வியாபாரிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என வவுனியா நகரசபையின் உறுப்பினர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தினை கிராமமட்டத்தில் இருந்து உருவாக்கும் வேலைத்திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அங்காடி வியாபாரிகளை நகர வீதிகளில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் அகற்றியுள்ளோம். எனினும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு புதுவருடப்பிறப்பிற்காக நகரசபை முன் வீதியில் வியாபாரத்திற்கு அனுமதித்திருந்தோம். புதுவருடப்பிறப்பு முடிந்த பின்னரும் அவர்கள் அந்த இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய முடியாது. எனினும் வவுனியாவை அடிப்படையாக கொண்ட வியாபாரிகள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு நகரசபை மாற்று ஏற்பாடுகளை செய்து வழங்க முடிவு செய்ததன் அடிப்படையில் அவ்வேலைத்திட்டத்தை நகரசபையின் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உபதலைவரான எம்.எம்.ரதனிடம் கையளித்தது. எனினும் அவ்வேலைத்திட்டம் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றது. அவ்விடத்தை அவர் சென்று பார்வையிடுவதேயில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு நகரசபையினை செயற்படுத்துவது. இன்று மற்றைய ஓர் உறுப்பினரிடம் அவ்வேலைகள் கையளிக்கப்பட்டு வேகமாக இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகரசபைக்கு நாம் தேர்தலில் நின்றபோது பல்வேறான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசினோம். எம்மால் முடியுமா என்று கூட சிந்திக்காத வகையில் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் நடந்தது என்ன? சபைக்கூட்டங்களுக்கு வந்து தீர்மானங்களை முன்மொழிவதும் வழிமொழிவதும் தேநீரைக் குடிப்பதும் அங்கு தரப்படும் காசோலையை வேண்டிக்கொண்டு செல்வதுமாகவே இருந்தது. வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக இல்லை. 30 வேலைத்திட்டத்தை முன்மொழிந்து 3 வேலைத்திட்டமாவது செய்யாது விடுவதை பார்க்கினும் 10 வேலைத்திட்டத்தையாவது சிறப்பாக செய்யவேண்டும். ஆனால் இன்று சற்று மாற்றம் காணப்படுகின்றது. அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் சில செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. அவை முன்னெடுக்கப்படவும் இல்லை. நகரசபை வட்டாரத்தில் ஒரு சில வட்டாரங்களே முன்னேறியுள்ளது. ஆனால் வேலைதிட்டங்கள் சம அளவில் அனைத்து வட்டாரத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அனைத்து பிரதேசமும் முன்னேற வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பூந்தோட்டத்தில் புதிதாக பல கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட எரிவாயு மயானம் இன்னும் திறக்கப்படவில்லை. யாரை அழைத்து திறப்பது என்பதில் காலதாமதம் காணப்படுகின்றது. இன்று வடமாகாணம் ஆளுநரின் கீழ் காணப்படுகின்றது. ஆளுநர் வந்துதான் திறக்க வேண்டுமானால் திறக்க விடுங்கள். எமக்கு காரியம் முடியவேண்டும். யார் திறப்பது என்பதில் எமக்கு தேவையில்லை. அதனை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்மயானம் இன்று கட்டாக்காளி நாய்களின் இருப்பிடமாக மாறிவிட்டது. நாய்களின் எச்சம் விலையுயர்வான தரையோடுகளின் மீது காணப்படுகின்றது.
தனியார் நிறுவனத்தின் காவலாளிகளை நியமித்து அவற்றை பராமரியுங்கள் என சபை கூட்டத்தில் கூறினேன் எதுவும் நடக்கவில்லை. நகரசபைக்கு சொந்தமான பொதுப்பூங்கா மோசமான நிலையில் உள்ளது. அங்கு பூட்டப்பட்ட மின்குமிழ்கள் உடைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவை பாருங்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளது. ஒரு கிராம அபிவிருத்தி சங்கம் அதனை சிறப்பாக செயற்படுத்தி வருகின்றது. ஏன் நகரசபையால் எதனையும் செய்ய முடியாதுள்ளது.
இன்று நகரசபை தலைவர் இக்கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லை. கேட்டால் லீவு என்கின்றனர். எப்போது கேட்டாலும் லீவு என்கின்றனர். ஆகவே இதுவரை 30 மாதங்களை நகரசபை புதிய நிர்வாகம் பெறுப்பேற்று கடந்துவிட்டது. எஞ்சியுள்ள 18 மாதங்களில் எதனையாவது மக்களுக்கு செய்யவேண்டும். இல்லையேல் நாம் உறுப்பினர்களாக இருப்பதில் எவ்விதபலனும் இல்லை' என்றார்.
இந்நிகழ்வுக்கு நகரசபையின் உறுப்பினர் எஸ்.செல்லத்துரை, நகரசபை செயலாளர் வீ.வசந்தகுமார், சனசமூக பொறுப்பதிகாரி திருமதி வாஜிபா, குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், குடியிருப்பு கிராம சேவையாளர், நகரசபை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா நகரசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தினை கிராமமட்டத்தில் இருந்து உருவாக்கும் வேலைத்திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அங்காடி வியாபாரிகளை நகர வீதிகளில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் அகற்றியுள்ளோம். எனினும் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு புதுவருடப்பிறப்பிற்காக நகரசபை முன் வீதியில் வியாபாரத்திற்கு அனுமதித்திருந்தோம். புதுவருடப்பிறப்பு முடிந்த பின்னரும் அவர்கள் அந்த இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய முடியாது. எனினும் வவுனியாவை அடிப்படையாக கொண்ட வியாபாரிகள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு நகரசபை மாற்று ஏற்பாடுகளை செய்து வழங்க முடிவு செய்ததன் அடிப்படையில் அவ்வேலைத்திட்டத்தை நகரசபையின் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உபதலைவரான எம்.எம்.ரதனிடம் கையளித்தது. எனினும் அவ்வேலைத்திட்டம் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றது. அவ்விடத்தை அவர் சென்று பார்வையிடுவதேயில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு நகரசபையினை செயற்படுத்துவது. இன்று மற்றைய ஓர் உறுப்பினரிடம் அவ்வேலைகள் கையளிக்கப்பட்டு வேகமாக இடம்பெற்று வருகின்றது.
வவுனியா நகரசபைக்கு நாம் தேர்தலில் நின்றபோது பல்வேறான வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசினோம். எம்மால் முடியுமா என்று கூட சிந்திக்காத வகையில் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் நடந்தது என்ன? சபைக்கூட்டங்களுக்கு வந்து தீர்மானங்களை முன்மொழிவதும் வழிமொழிவதும் தேநீரைக் குடிப்பதும் அங்கு தரப்படும் காசோலையை வேண்டிக்கொண்டு செல்வதுமாகவே இருந்தது. வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக இல்லை. 30 வேலைத்திட்டத்தை முன்மொழிந்து 3 வேலைத்திட்டமாவது செய்யாது விடுவதை பார்க்கினும் 10 வேலைத்திட்டத்தையாவது சிறப்பாக செய்யவேண்டும். ஆனால் இன்று சற்று மாற்றம் காணப்படுகின்றது. அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் சில செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. அவை முன்னெடுக்கப்படவும் இல்லை. நகரசபை வட்டாரத்தில் ஒரு சில வட்டாரங்களே முன்னேறியுள்ளது. ஆனால் வேலைதிட்டங்கள் சம அளவில் அனைத்து வட்டாரத்திற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு அனைத்து பிரதேசமும் முன்னேற வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பூந்தோட்டத்தில் புதிதாக பல கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட எரிவாயு மயானம் இன்னும் திறக்கப்படவில்லை. யாரை அழைத்து திறப்பது என்பதில் காலதாமதம் காணப்படுகின்றது. இன்று வடமாகாணம் ஆளுநரின் கீழ் காணப்படுகின்றது. ஆளுநர் வந்துதான் திறக்க வேண்டுமானால் திறக்க விடுங்கள். எமக்கு காரியம் முடியவேண்டும். யார் திறப்பது என்பதில் எமக்கு தேவையில்லை. அதனை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்மயானம் இன்று கட்டாக்காளி நாய்களின் இருப்பிடமாக மாறிவிட்டது. நாய்களின் எச்சம் விலையுயர்வான தரையோடுகளின் மீது காணப்படுகின்றது.
தனியார் நிறுவனத்தின் காவலாளிகளை நியமித்து அவற்றை பராமரியுங்கள் என சபை கூட்டத்தில் கூறினேன் எதுவும் நடக்கவில்லை. நகரசபைக்கு சொந்தமான பொதுப்பூங்கா மோசமான நிலையில் உள்ளது. அங்கு பூட்டப்பட்ட மின்குமிழ்கள் உடைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவை பாருங்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளது. ஒரு கிராம அபிவிருத்தி சங்கம் அதனை சிறப்பாக செயற்படுத்தி வருகின்றது. ஏன் நகரசபையால் எதனையும் செய்ய முடியாதுள்ளது.
இன்று நகரசபை தலைவர் இக்கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லை. கேட்டால் லீவு என்கின்றனர். எப்போது கேட்டாலும் லீவு என்கின்றனர். ஆகவே இதுவரை 30 மாதங்களை நகரசபை புதிய நிர்வாகம் பெறுப்பேற்று கடந்துவிட்டது. எஞ்சியுள்ள 18 மாதங்களில் எதனையாவது மக்களுக்கு செய்யவேண்டும். இல்லையேல் நாம் உறுப்பினர்களாக இருப்பதில் எவ்விதபலனும் இல்லை' என்றார்.
இந்நிகழ்வுக்கு நகரசபையின் உறுப்பினர் எஸ்.செல்லத்துரை, நகரசபை செயலாளர் வீ.வசந்தகுமார், சனசமூக பொறுப்பதிகாரி திருமதி வாஜிபா, குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், குடியிருப்பு கிராம சேவையாளர், நகரசபை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.