யாழ். சென்ற தனியார் பஸ் வவுனியாவில் விபத்து (8 பேர் படுகாயம்)

வவுனியா - யாழ்ப்பாணம் A-9 வீதியில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2012 அதிகாலை 04.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை - மாணிக்கவலபீட பகுதியில் விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸில் 30 பயணிகள் வரை இருந்துள்ளதுடன் அதில் 7 ஆண்களும் ஒரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.