வவுனியா ஓமந்தையில் அரச பேரூந்து, தனியார் வாகனங்களுடன் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். |
| ஓமந்தை காவற்றுறை நிலையத்திற்கு அருகில் நேற்று மதியம் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p> |
| இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, |
| யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இ.போ.ச பேரூந்தின் சக்கரங்களுள் ஒன்றில் திடீரென காற்று இறங்கியுள்ளது. இதனால் குறித்த அப் பேரூந்து தனது கட்டுப்பாட்டை முன்னால் வந்த வானுடன் மோதியுள்ளது. அதன் பின்னர் நிலைதடுமாறிய இரு வாகனமும் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதின |
| இதன்போது, 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக, வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| இந்த விபத்துச் சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |