வாகன விபத்தில் 18 பேர் காயம்,

வவுனியா ஓமந்தையில் அரச பேரூந்து, தனியார் வாகனங்களுடன் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தை காவற்றுறை நிலையத்திற்கு அருகில் நேற்று மதியம் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இ.போ.ச பேரூந்தின் சக்கரங்களுள் ஒன்றில் திடீரென காற்று இறங்கியுள்ளது. இதனால் குறித்த அப் பேரூந்து தனது கட்டுப்பாட்டை முன்னால் வந்த வானுடன் மோதியுள்ளது. அதன் பின்னர் நிலைதடுமாறிய இரு வாகனமும் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதின
இதன்போது, 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக, வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.