வவுனியாவில் அமெரிக்காவிற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
ஜெனிவாவில் போர் குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ளப்படவுள்ளதாக நம்பபடும் பிரேணைக்கு எதிராக இன்று நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கண்டி வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் இருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.
"எங்களை நிம்மதியாக வாழ விடு", "எங்கள் பிள்ளைகளை கற்க விடு"
அமெரிக்காவே போர் குற்றவாளியென்பது போன்ற வாசகங்களை ஏந்தியதுடன் கோசங்களையும் எழுப்பிய படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கண்டி வீதி ஊடாக பஸார் வீதிக்குச் சென்று மீள மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் மக்கள் என பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டதுடன் வவுனியா பௌத்த விகாரை தேரர் சியம்வல கஸ்வௌ விமலசார தேரர் வவுனியா நகரசபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் லலித் ஜயசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
By:-yasikanth