இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை
இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றவேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டங்கள் நாளை முதல் நாடு முழுவதும் 150 நகரங்களில் நடத்தப்படவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்கள், யாழ்ப்பாணம்,வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் மார்ச் 2 ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
By:-yasikanth