வவுனியா சிறையில் மட்டக்களப்பைச் சேர்ந்த கைதி மரணம்!

வவுனியா சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று மரணமடைந்துள்ளதாக வவுனியா சிறைச்சாலையின் பிரதான சிறைக் காவலர் டி. ராஜகருணாரட்ன தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியை சேர்ந்த 30 வயதான அமான் என்ற கைதியே மரணமடைந்துள்ளதாகவும் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் டி. ராஜகருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சடலத்தினை பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிவான், குறித்த சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகர் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாகவே குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.