Pages

Pages

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரத்து!

2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிதாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட இருப்பதனால் முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து பெறுபேறுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நாட்டின் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம் ஏற்படாது எனவும் இசட் புள்ளி மற்றும் மாவட்ட நிலை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.